அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சர சாதனைச் செம்மல் கே.ஏ. செங்கோட்டையன், தலைமை யில், பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அ. பண் ணாரி எம்.எல்.ஏ ,ஈரோடு புற நகர் மேற்குமாவட்ட மகளிரணி தலைவர் ஏ.டி.சரஸ்வதி வழி காட்டலில், சத்திய மங்கலம் பஸ் நிலையம் அருகே தாகம் தீர்க்கும் நீர்மோர், இளநீர் மற்றும் தர்பூசணி வழங்கப் பட்டது.. நீர்மோர்பந்தலை முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்து, மாணல, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
பவானி சாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் கழக பொறுப் பாளர்களும், அனைத்து சார்பு அணி பொறுப்பாளர்களும், மாவட்ட கவுன்சிலர்கள், ஊரா ட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மருத்துவர் கள், வழக்கறிஞர்கள் என பெருந்திரளாக கலந்துகொண் டனர்..நிகழ்வுக்கான ஏற்பாடு களை ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் வே.பெ. தமிழ்ச் செல்வி, சத்தி நகர அவைத் தலைவர் நாராயணன், பவானி சாகர் வடக்கு ஒன்றிய மகளிர் அணி தலைவர் சக்குபாய், பவானி சாகர் வடக்கு ஒன்றிய மகளிரணி செயலாளர் வசந் தாமணி மற்றும் சத்தியமங் கலம் முன்னாள் நகர்மன்ற தலைவர்ஓ.எம்.சுப்பிரமணியம் ஆகியோரும் செய்திருந்தனர்.. பள்ளி குழந்தைகள் மற்றும் தாகத்தால் வந்த மக்களும் நீர் மோர் அருந்தி சென்றார்கள்.. அவ்வழியே சென்ற கல்லூரி மாணவிகள், தங்களுக்கு லேப்டாப் கொடுத்து, தங்கள் படிப்பிற்கு உதவிய முன்னாள் கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.