தூத்துக்குடியில் சிவந்தி ஆதித்தனாரின் 9-ம் ஆண்டு நினைவு தினம் - அரசியல் கட்சியினர் மரியாதை


தூத்துக்குடியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 9ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி காமராஜ் சிலை அருகில் உள்ள வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு  மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வடக்கு திமுக சார்பில் திமுக பொதுக்குழு உறுப்பினரும், மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி, தலைமையில் மரியாதை செலுத்தினர். நிகழ்வில் திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், 

மாநகர மருத்துவ அணி செயலாளர் அருண்குமார், மாநகர மீனவரணி துணைச்செயலாளர் ஆர்தர்மச்சாது, மாவட்ட தொண்டரணி துணைச்செயலாளர் ராமர், போல்பேட்டை பகுதி பிரபாகர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், முன்னாள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி, நிர்வாகிகள் கோபால், சேகர், ஐசன்சில்வா, ராஜன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி, பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, வக்கீல் பிரபாகரன், மற்றும் ஜெயக்கொடி,

வடக்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் கதிர்வேல், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், மாநர செயலாளர் உதயசூரியன், வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், மாநில மதசார்பற்ற ஜனதாதள துணைத்தலைவர் வக்கீல் சொக்கலிங்கம்,

பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் வக்கீல் வாரியார், வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, சிவந்தி ஆதித்தனர் நற்பணி மன்ற மாநகர தலைவர் வக்கீல் பாலசேகர், உட்பட பல அரசியில் கட்சி பொதுநல அமைப்பினர் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Previous Post Next Post