சிறுமுகை அருகே தனியார் பஸ் - மினி பஸ் மோதல்... 9 பேர் படுகாயம்

 சிறுமுகை அருகே தனியார் பேருந்தும் பஸ்சும் மினி பஸ்சும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்திற்கு தனியார் பஸ் ஒன்று சென்றது. சிறுமுகை சாலை வழியாக சென்று கொண்டிருந்த இந்த பஸ் வழக்கம் போல பயணித்தது.

இதேபோல் இரும்பொறையில் இருந்து தனியார் மில்லில் வேலை முடிந்து வந்தவர்களை ஏற்றி கொண்டு மினி பஸ் ஒன்றும் சிறுமுகை நோக்கி வந்தது.

 அதே ரோட்டில் எதிர் புறமாக வந்து கொண்டிருந்தது. 

அப்போது இந்த இரு பஸ்களும் சிட்டேபாளையம் பால்காரன் ரோடு என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த பொது, மினி பஸ் டிரைவர் தனக்கு முன் சென்ற இருசக்கர வாகனத்தை முந்த முயற்சித்துள்ளார்.

அப்போது

 எதிர்பாராத விதமாக மேட்டுப்பாளையத்திலிருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்த தனியார் பஸ் மீது மினி பஸ் நேருக்கு நேர் மோதியது

 இதில் தனியார் பஸ் ஓட்டுனர் முத்துசாமி மற்றும் தனியார் மினி பஸ் ஓட்டுநர் விக்னேஸ் மினி பஸ்ஸில் வந்த சிறுமுகை பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் , விக்னேஸ் , செல்வி, கஸ்தூரி, கவிதா , ஐயப்பன் , பானு , ஆகியோர் படுகாயமடைந்தனர். 

இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் அங்கு இருந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

தகவலறிந்தத மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.k செல்வராஜ் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்

 சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post