பண்ணாரி அருகே சாலை விபத்தில் ஒருவர் மரணம். 6 பேர் படுகாயம்.

 

தமிழ் புத்தாண்டு தினத்தன்று, மதியம் 12:00 மணி அளவில் பண்ணாரி கோவிலுக்குச் சென்று, சாமியை தரிசித்துவிட்டு அம்பாசிடர் காரில், வீடு திரும்பிக் கொண்டிருந்த கோபிச்செட்டிபாளையம் சீதாலட்சுமி நகரைச் சேர்ந்த வள்ளியம்மாள் குடும்பத்தினர் வடவள்ளி அருகே வரும்பொழுது எதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  

 இதில் மொத்தம் 6 பேர் காயமடைந்து முதலுதவி பெற சத்தி அரசு மருத்துவமனைக்கு சென்று, பின்னர்  மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சென்றுள்ளனர். காரில் வந்த வள்ளியம்மாள் என்பவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு வரும் வழியில் இறந்து விட்டார். 

தகவல் அறிந்து,சம்பவ இடத்திற்கு சத்தி டி.எஸ்.பி ஜெயபாலன் மற்றும் சத்தியமங்கலம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சும்பிரமணியம் ஆகியோர் விரைந்து, விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்சத்தியமங்கலம் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து, விபத்து குறித்து விசாரனை மேற்கொண்டு, வருகின்றனர்.

Previous Post Next Post