திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சிக்குழு தலைவராக 42 வது வார்டு கவுன்சிலர் ஆர்.அன்பகம் திருப்பதி தேர்வு

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.,சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் திருப்பூர் தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும், 42 வது வார்டு கவுன்சிலருமான ஆர்.அன்பகம் திருப்பதி மாநகராட்சியின் அதிமுகவின் மாநகராட்சிக்குழு (எதிர்க்கட்சிக்குழு) தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

கவுன்சிலர் சாந்தி பாலசுப்பிரமணியம் துணைத் தலைவராகவும், கவுன்சிலர் முத்துசாமி செயலாளராகவும், தமிழ்ச்செல்வி கனகராஜ் எதிர்க்கட்சிக்குழுவின் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளரும், 44 வது வார்டு அதிமுக செயலாளருமான எம்.கண்ணப்பன் எதிர்க்கட்சிக்குழு கொறடாவாக தேர்வு செய்யப்பட்டார். 

கவுன்சிலர் ஆர்.ஏ.சேகர் துணை கொறடாவாகவும், தங்கராஜ் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

 எதிர்க்கட்சிக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் அதற்கான அறிவிப்பினை வழங்கினார். 

Previous Post Next Post