தூத்துக்குடியில் அதிக லாபம் பெறலாம் என கூறி ரூ.36 லட்சம் மோசடி - பெண் உட்பட 2 பேர் கைது.!


தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் பொன்முனியசாமி (43) என்பவரிடம் மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சிவராமகிருஷ்ணன், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த மாசாணம் மகன் ராஜ் (41) 

மற்றும் முத்தையாபுரம் தங்கமணி நகரைச் சேர்ந்த நயினார் மனைவி ஜெயலட்சுமி (52) ஆகிய 3 பேரும் கடந்த 01.12.2019 அன்று அறிமுகமாகி தங்களுடைய ‘சன்மேக்ஸ்” என்னும் முதலீட்டு நிறுவனத்தில் 


பணம் முதலீடு செய்தால் 10% லாபம் ஈட்டி தருவதாக கூறியதன் பேரில் பொன்முனியசாமி ரூ.18 லட்சமும், இதே போன்று மாரிச்சாமி என்பவர் ரூ.5.25லட்சமும், செல்வராஜ் என்பவர் ரூ.7.35லட்சமும், சந்தனகுமார் என்பவர் ரூ.84ஆயிரமும், 

குருசாமி என்பவர் ரூ.3.78லட்சமும் மற்றும் ரகுராமன் என்பவர் ரூ.84ஆயிரமும் என மொத்தம் ரூ.36,06,000 பணத்தை அந்நிறுவனத்தின் வங்கி கணக்கில் முதலீடு செய்துள்ளனர். 

இதனையடுத்து மேற்படி 3 எதிரிகளும் முதலீட்டு தொகைக்கு சில மாதங்கள் வரை 10 சதவீதம் லாபத்தினை மட்டும் கொடுத்துவிட்டு, பின்பு அவர்களின் முதலீட்டு தொகை நஷ்டம் அடைந்து விட்டதாகவும் முதலீட்டு பணத்தை திருப்பி தர முடியாது எனவும், 


பணம் கேட்டு வந்தால் வழக்கு தொடர்வதாகவும் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.  இதுகுறித்து பொன் முனியசாமி அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் வனிதா ராணி, உதவி ஆய்வாளர் காந்திமதி, தலைமைக் காவலர்கள் பிள்ளைமுத்து மற்றும் ஈஸ்வரி ஆகியோர் 

விசாரணை மேற்கொண்டு ராஜ் மற்றும் ஜெயலட்சுமி ஆகிய இருவரையும் இன்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு மற்றொரு எதிரியை தேடி வருகின்றனர். 

Previous Post Next Post