தூத்துக்குடியில் இன்றும் 2 பேருக்கு குண்டாஸ்.!


தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில்  ஈடுபட்ட எதிரிகள் 2 பேர் இன்று  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

கடந்த 10.03.2022 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளிநாயகபுரம் அருகே வந்துகொண்டிருந்த ஒருவரிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்கி கொலைமுயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த சேர்மராஜ் மகன் சக்திவேல் (எ) சக்தி (23) என்பவரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரியான சக்திவேல் (எ) சக்தி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் அவர்களும்,

கடந்த 24.03.2022 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆறுமுகநேரி ராஜமணியாபுரம் பகுதியை சேர்ந்த தங்கதுரை மகன் பைசன் (54) என்பவரிடம் குடிபோதையில் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஆறுமுகநேரி ராஜமணியாபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் மகன் முத்துராஜ் (27) என்பவரை ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரியான முத்துராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலாஜி சரவணன்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ் தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த சேர்மராஜ் மகன் 1) சக்திவேல் (எ) சக்தி மற்றும் ஆறுமுகநேரி ராஜமணியாபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் மகன் 2) முத்துராஜ் ஆகிய 2 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் மேற்படி எதிரிகள் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.*

Previous Post Next Post