தூத்துக்குடி: கணவன் மனைவி இடையே தகராறு - 2 வயது குழந்தை அடித்து கொலை.!


தூத்துக்குடி தாளமுத்து நகரில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இரண்டு வயது குழந்தை கேத்தரினாவை அடித்துக் கொலை செய்த தந்தை டேவிட்டை தாளமுத்து நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் மேற்கு, மாப்பிள்ளையூரணி, காமராஜ் நகரைச் சேர்ந்தவர் கிஷோர் மனைவி ஸ்டெபினா இந்த தம்பதியருக்கு கிறிஸ்டினா (5), கேத்ரின் (2¼) என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவா் ஸ்டெபினா. இவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவரை பிரிந்து இரண்டு வயது குழந்தை கேத்தரீனா உடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில், ஸ்டெபீனா, டேவிட் பினகாஸ்,  இவர்கள் இருவரும் மேட்ரிமோனி மூலமாக பார்த்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். 


திருமணமான சில நாட்களில் டேவிட், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டதால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரம் அடைந்த டேவிட் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கேத்ரீனை சுவரில் வீசி அடித்துள்ளார். பின்னர் மனைவியையும் தாக்கிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.


இந்நிலையில் இன்று காலை கெபி, குழந்தையை பார்த்தபோது,​​ குழந்தை சுயநினைவின்றி இருந்தது. குழந்தையை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தாளமுத்துகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கொலை வழக்குப் பதிந்து டேவிட்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post