வேலம்மாள் பள்ளியின் இளம் வில்வித்தை வீராங்கனை 2022 ஆம் ஆண்டிற்கான வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் சாதனை

வேலம்மாள் வித்யாலயா  இணைப்பு பள்ளியின் 4 ஆம் வகுப்பு மாணவி எஸ் சஞ்சனாஸ்ரீ,  கோவை பொள்ளாச்சியில் உள்ள பி.ஏ கல்வி நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்த 2-வது தமிழ்நாடு உள்ளரங்க வில்வித்தை சாம்பியன்ஷிப் -2022 ல் பங்கேற்று விளையாடினார்.இப்போட்டியின் ரீகர்வ் போ எனப்படும் சுற்றில் 10 வயதிற்குட்பட்ட  பெண்கள் பிரிவில் மிக்ஸ் ஸ்பாட் என்றழைக்கப்படும் போட்டியில் மாணவி எஸ் சஞ்சனாஸ்ரீ,  தங்கம் வென்றார். தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் பங்கேற்றன. இவரது சாதனையை பள்ளி நிர்வாகம் பாராட்டி  வாழ்த்துகிறது .



Previous Post Next Post