அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் ப்ளூமிங்டனில் உள்ள தார் அல் ஃபரூக் இஸ்லாமிய மையத்தின் மீது 2017 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பில் ஈடுபட்டதற்காக இரண்டு பேருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இல்லினாய்ஸ் நீதிமன்றம் செவ்வாய்கிழமை தீர்ப்பளித்தது.
குண்டு வைத்தல், துப்பாக்கிச் சூடு, தீ வைத்தல், அழிவுகரமான சாதனத்தைப் பயன்படுத்துதல் மற்றும் கூட்டாட்சி சிவில் உரிமைகளை மீறியது ஆகிய குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால்
மைக்கேல் மெக்வோர்டர், 33, மற்றும் ஜோ மோரிஸ், 26, ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை 14 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது,
McWhorter க்கு 190 மாதங்கள் சிறைத்தண்டனையும், மோரிஸுக்கு 170 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இருவரும் ஜனவரி 2019 இல் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மூன்றாவது நபர், எமிலி ஹரி, குண்டுவெடிப்பில் ஹரியின் பங்கிற்காக முன்னர் குற்றம் சாட்டப்பட்டு 53 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார் என்று அமெரிக்க நீதித்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 5, 2017 அன்று, McWhorter மற்றும் Morris இருவரும் வீட்டில் தயாரித்த வெடிகுண்டுகளை, வாடகைக்கு எடுக்கப்பட்ட பிக்கப் டிரக்கில் "DAF இஸ்லாமிய மையத்தின் மீது குண்டு வீசுவதற்காக" ஓட்டிச் சென்றனர் என்று அமெரிக்க அட்டர்னி அலுவலகத்தின் அறிக்கை கூறுகிறது. மசூதியில் வெடிகுண்டு வீசப்பட்டது, குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
"தார் அல்-ஃபாரூக் இஸ்லாமிய மையத்தின் மீது குண்டுவெடிப்பு போன்ற வெறுப்பு தூண்டப்பட்ட வன்முறைச் செயல்கள் நமது சட்டங்களை மீறுகின்றன மற்றும் ஒரு தேசமாக நமது மதிப்புகளுக்கு முரணாக செயல்படுகின்றன" என்று நீதித்துறையின் சிவில் உரிமைகள் பிரிவின் உதவி அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டன் கிளார்க் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.