ஜி.எஸ்.டி. பெயரில் ரூ.1 கோடி மோசடி - விஸ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர் கைது!

 

சென்னையில் போலி வருமான வரி அதிகாரியை வைத்து ரூ. 1 கோடி மோசடியில் ஈடுபட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர் தணிகைவேல் சிறையில் அடைப்பு!

சென்னையில் தனியார் நிறுவனத்திடம் போலி வருமான வரி அதிகாரியை வைத்து ஜி.எஸ்.டி. பெயரில் ரூ.1 கோடி மோசடி செய்த விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண மோசடி செய்த நங்கநல்லூரை சேர்ந்த விஸ்வ இந்து பரிஷத்தின் தென் சென்னை இணை செயலாளர் தணிகை வேல் கைது செய்யப்பட்டுள்ளார்.

தணிகை வேலுடன் கீழ்பாகத்தை சேர்ந்த தீபக் கோத்தாரியையும் கைது செய்து காவல்துறை சிறையில் அடைந்துள்ளது. ஸ்ரீபெரம்பத்தூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் வி.எச்.பி பிரமுகர் ரூ.1 கோடி பணம் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

#Chennai | #IncomeTax

Ahamed

Senior Journalist

Previous Post Next Post