தூத்துக்குடி மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் பணியிடமாற்றம் - மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு.


தூத்துக்குடி மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி தூத்துக்குடி சிவில் சப்ளை தாசில்தாராக பணியாற்றிய செல்வக்குமார் தூத்துக்குடி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி தாசில்தாராக பணியாற்றிய ஜஸ்டின் செல்லத்துரை தூத்துக்குடி சிவில் சப்ளை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தூத்துக்குடி நகரநலவரித்திட்ட செட்டில்மென்ட் தாசில்தாராக பணியாற்றிய லட்சுமி கணேஷ் சிப்காட் நிலஎடுப்பு (அலகு-4) தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிப்காட் நிலஎடுப்பு அலகு-7 தாசில்தாராக பணியாற்றிய சிவகாமி சுந்தரி  தூத்துக்குடி நகரநலவரித்திட்ட செட்டில்மென்ட் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவில்பட்டி தாசில்தார் அமுதா, தூத்துக்குடி சிப்காட் நிலவங்கி தாசில்தாராகவும், 

சிப்காட் நிலஎடுப்பு அலகு-2  தாசில்தாராக பணியாற்றிய சுசிலா கோவில்பட்டி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 18 தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post