அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பயணிகள் மீது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் படுகாயமடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என NYC தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஆடைகளில் ரத்தம் படிந்த நிலையில் கீழே விழுந்து கிடக்கும் பயணிகள் குறித்த புகைப்படங்களும் அவர்களுக்கு மற்றவர்கள் உதவுவதை காட்டும் புகைப்படங்களும் சமூக வளைதலங்களில் பகிரப்பட்டுள்ளன.
சென்று கொண்டிருந்த ரயிலில் புகையை உண்டாக்கிய குற்றவாளிகள் பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர் ஒரு கறுப்பின ஆண், 5'5" உயரம், கனமான உடலமைப்புடன் இருந்தார். பச்சை நிற உடைனிந்த ஒருவர், சாம்பல் நிற ஸ்வெட்ஷர்ட் hood அணிந்திருந்ததாக அசோசியேட்டட் பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
கூட்டம் அதிகம் காணப்படும் நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த பகுதியில் வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தீவிரவாத தாக்குதலாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில் அது குறித்து காவல்துறை அதிகாரிகள் உறுதிபடுத்தவில்லை.