திருப்பூரில் ரூ.1568 கோடிக்கு பட்ஜெட்.. மேயர் தினேஷ்குமார் தலைமையில் தாக்கல்

 திருப்பூர் மாநகராட்சியின் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. திருப்பூர் மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். 

துணை மேயர் பாலசுப்பிரமணியம், கமிஷனர் கிரந்தி குமார் பாடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிதிநிலைக் குழு தலைவர் கோமதி பட்ஜெட் அறிக்கையை திருப்பூர் மேயர் தினேஷ்குமார் வசம் வழங்கினார்.

 மாமன்ற அரங்கில் மேயர் ந.தினேஷ்குமார் பட்ஜெட் அறிக்கையை வாசித்தார். அதில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இதில் திருப்பூர் மாநகராட்சியில் 1568 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ.10 கோடி பற்றாக்குறை ஆகும்.

அப்போது பேசிய மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களை வணங்கி பட்ஜெட் அறிக்கையை சமர்ப்பிக்கிறேன். கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. பள்ளிகளுக்கு வகுப்பறைகள், வசதிகள் செய்து தரப்படும்.

நமக்கு நாமே திட்டத்தில் 5.62 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நிறைவேற்றப்படும். திருப்பூர் மாநகராட்சியில் 1120 கோடியில் செயல்படும் அம்ருத் திட்டம் 74 சதவீதம் பணிகள் முடிந்து உள்ளது.

 குப்பை அகற்ற புதிய வாகனங்கள் வாங்கப்படும். சாலைப்பணிகள் போர்க்கால அடிப்படையில் மேரகொல்லப்படும். குளியல் அறையில் தங்கும் உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படும். 100 கோடி திட்ட மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு ஆய்வு மேற்கொள்ளப்படும். 

நொய்யல்க்கு மறுவாழ்வு, மாநகரில் மக்களுக்காக இரவு நேர தங்கும் விடுதிகள் கட்டப்படும். மாநகராட்சிக்கு சொந்தமான மனைப் பிரிவுகளில் நீச்சல் குளம் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்படும்.

 தெருநாய்கள் கட்டுப்படுத்தப்படும். கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும். மக்களிடம் நேரடியாகச் சென்று குறைகள் இருக்கும் மக்களுடன் மேயர் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு மேயர் தினேஷ்குமார் பேசினார்.

பட்ஜெட் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வினைக் கண்டித்து அதிமுக குழு தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.


தொடர்ந்து பாஜக கவுன்சிலர்கள் காடேஸ்வரா தங்கராஜ், குணசேகரன் ஆகியோரும் சொத்து வரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

 மண்டல குழு தலைவர்கள் கோவிந்தசாமி, பத்மனாபன், உமா மகேஸ்வரி தம்பி கோவிந்தராஜ் உள்பட கவுன்சிலர்கள் திரளாக பங்கேற்றனர்.



Previous Post Next Post