1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வு கிடையாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.!

தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடைபெறாது என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 5-ந் தேதி முதல் இறுதித்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13ம் தேதி எனவும், 2022-23ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ம் தேதி தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது! 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post