விமானத்தில் திடீர் புகை - கராச்சியில் அவசரமாக தரையிறங்கிய டெல்லி To கத்தார் விமானம்.!

சரக்கு வைக்கும் பகுதியில் ஏற்பட்ட திடீர் புகை மூட்டத்தால்  அவசரநிலை அறிவிக்கப்பட்ட டெல்லி-தோஹா கத்தார் ஏர்வேஸ் விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறங்கியது. டெல்லியில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்ட விமானம், புறப்பட்ட 1.15 மணி நேரத்தில் கராச்சியில் தரையிறங்கியது. இது தோஹாவில் காலை 7.15 மணிக்கு தரையிறங்குவதாக இருந்தது.

கத்தார் ஏர்வேஸ் விமானம் QR579, சரக்குக் கிடங்கில் புகை ஏற்பட்டதால் அவசரநிலை அறிவிக்கப்பட்டதை அடுத்து கராச்சிக்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். "விமானம் கராச்சியில் பாதுகாப்பாக தரையிறங்கியது,  பயணிகள் படிக்கட்டுகள் வழியாக பாதுகாப்பாக இறங்கினார்கள்."

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், கராச்சியில் இருந்து தோஹாவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. "எங்கள் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், அவர்கள் தங்கள் பயணத் திட்டங்களுக்கு உதவுவார்கள்." என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post