ஸ்ரீபெரும்புதூர் : செயின்ட்-கோபைன் (St.Gobain) நிறுவனத்தின் புதிதாக நிறுவப்பட்டுள்ள மிதவை கண்ணாடி பிரிவு (Float Glass), ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு - முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் இன்று (9.3.2022) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், செயின்ட்-கோபைன் (St.Gobain) நிறுவன வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மிதவை கண்ணாடி பிரிவு (Float Glass), ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவுவை திறந்து வைத்து தொழிற்சாலையை பார்வையிட்டார். 

அப்போது அவருடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வப்பெருந்தகை, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எம். ஆர்த்தி, இ.ஆ.ப., செயின்ட் கோபைன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் பெனாய்ட் பாசின், செயின்ட் கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், செயின்ட் கோபைன் ஆசிய - பசிபிக் தலைமைச் செயல் அலுவலருமான பி. சந்தானம் மற்றும் நிறுவன உயர் அதிகாரிகள் அவருடன் உடனிருந்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post