வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு பனை ஏறும் கருவி - கனிமொழி MP, மற்றும் அமைச்சர்கள் வழங்கினர்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு பனை ஏறும் கருவியை அமைச்சர்கள் மற்றும் கனிமொழி MP ஆகியோர் வழங்கினர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ,சமூக நலன், மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மற்றும் மீன்வளம், மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று (20.03.2022) தூத்துக்குடி , அந்தோணியார்புரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற பனை ஏறும் கருவி செயல்விளக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. கி.செந்தில்ராஜ், முன்னிலையில் பார்வையிட்டு அக்கருவியினை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மற்றும்  வேளாண்மை துணை இயக்குனர்கள், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர்  உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post