தூத்துக்குடியில் மது போதையில் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது..!


தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் அருகே நேற்று இரவு தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவை அந்தோணி பிச்சையா மகன் மரிய அந்தோணி ஆக்னல் (22) மற்றும் 

அவருடைய நண்பர் ஆகிய இருவரும் சேர்ந்து குடிபோதையில் இவர்களது மற்றொரு நண்பரான வினோத் என்பவரை அடித்துள்ளனர்.

இதனை பார்த்த தூத்துக்குடி விக்டோரியா சாலை பகுதியைச் சேர்ந்த மரிய அந்தோணிசேவியர் மகன் மைக்கேல் ரோகன் (41) என்பவர்  மரிய அந்தோணி ஆக்னல் மற்றும் அவரது நண்பரை சத்தம் போட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த மரிய அந்தோணி ஆக்னல் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் சேர்ந்து குடிபோதையில் மைக்கல் ரோகனை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மைக்கேல் ரோகன்  அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் வழக்குப்பதிவு செய்து எதிரி மரிய அந்தோனி ஆக்னல் என்பவரை கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட  மரிய அந்தோணி ஆக்னல் என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை, கொலை மிரட்டல் உட்பட 11 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post