புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் ஆபாச பேச்சு :சிறப்பு உதவி ஆய்வாளர் மீது பெண் புகார்.!- அதிகாரிகள் விசாரனை.!


புகார் கொடுத்து வந்த பெண்ணிடம், ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசியதாக சிறப்பு உதவி ஆய்வாளர் மீது காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பெண் புகார் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் ஆவினங்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் தகாத முறையில் பேசியதை கண்டித்து அவரது தாயார் சிறப்பு உதவி ஆய்வாளருடன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் தவறாக பேசியதாகவும், மாட்டுக் கறி சமைத்து வரச்சொல்லியதாகவும்,

 சிறப்பு உதவி ஆய்வாளர் பெண்ணின் தாயாரிடம் தொலைபேசியில் பேசியதாகவும், ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் , சம்பந்தப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளரிடம் உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post