தூத்துக்குடியில் நாளை மின்தடை.!


தூத்துக்குடியில் நாளை (மார்ச் 26) சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி அரசடி துணை மின் நிலையத்தில் நாளை (மார்ச் 26) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. 

இதனால் மேல அரசடி, கீழ அரசடி, கிழக்கு கடற்கரை சாலை, சமத்துவ புரம், தருவைகுளம், பட்டினமருதூர் உப்பளம் சார்ந்த பகுதிகள், எட்டையபுரம் ரோடு, பழைய ரோடு, புதூர் பாண்டியாபுரம், சில்லாநத்தம், வாலசமுத்திரம், ஜோதி நகர், ஓம்சாந்தி நகர் பகுதிகளில் , காலை 8மணி முதல் மாலை 4மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Previous Post Next Post