தூத்துக்குடி - சார்பு நீதிபதி தலைமையில் குடும்ப வன்கொடுமை சட்டம் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம்.!

தூத்துக்குடியில் சார்பு நீதிபதி M.பீரித்தா தலைமையில் குடும்ப வன்கொடுமை சட்டம் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தேசிய சட்டப்பணிகள்  ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில  சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில்  இன்று 25.3.2022 தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் குடும்ப வன்கொடுமை சட்டம் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாமானது தூத்துக்குடி ஸ்பிக் நகரில் உள்ள வியாபாரிகள் நலச்சங்கத்தில்  வைத்து நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/ சார்பு நீதிபதி M.பீரித்தா, தலைமை தாங்கினார்.

மேற்படி விழிப்புணர்வு முகாமில்  கிராம உதய தொண்டு நிறுவன பணியாளர்கள், 100 க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். மேற்படி முகாமில் தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் நலவாரியம் மூலம் 65 மக்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய அட்டைகள் தூத்துக்குடி  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் தலைமையில் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்  தனது தலைமையுரையில் இலவச சட்டத்திட்டத்தை பற்றியும்,  அரசு நலத்திட்டத்தை இலவச சட்ட உதவி மையம் மூலமாக எவ்வாறு பெறலாம் என்றும், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இலவச சட்ட உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு  கூறினார்.

மேற்படி சட்ட விழிப்புணர்வு முகாமை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அலுவலக பணியாளர்கள் A.நம்பிராஜன்,  T.பால் செல்வம் மற்றும் கிராம உதய தொண்டு நிறுவன ஊழியர் செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post