முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம்!

துபாயில் நடைபெறும் உலகக் கண்காட்சியில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் பயணம்
துபாயில் நடைபெறும் உலக கண்காட்சியில் மார்ச் 25ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படவுள்ளது. இதையொட்டி, உலக எக்ஸ்போ கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை சென்னை விமானநிலையத்தில் இருந்து 4.30 மணி விமானத்தில் துபாய் புறப்பட்டு சென்றார். அதில் தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப்படங்கள் இந்த அரங்கில் தொடர்ச்சியாக திரையிடப்படவுள்ளன. தமிழகத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அபுதாபிக்கும் அவர் செல்லவுள்ளார்.மேலும் புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொழில் துறை அமைச்சர், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் முதலமைச்சர் தலைமையிலான குழுவில் துபாய் புறப்பட்டு சென்றனர்.
Previous Post Next Post