சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்துக்கு புது சிக்கல்.. வெளியீட்டுக்கு தடை போடுகிறார் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன்

வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குருவின் மகனும் மாவீரன் மஞ்சள் படையின் தலைவருமான குரு கனலரசன் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 02-ம் தேதியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் டி.செ. ஞானவேல் இயக்கிய படத்தை. (2DEntertainment) நிறுவனம் தயாரித்து நடிகர் சூர்யா நடித்துள்ளார் இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ள உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம்.
அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பேரில் இருக்க கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க SIஅந்தோணிசாமி என்ற தலித் கிறிஸ்தவர் மட்டும் குருமூர்த்தி என்கிற கதாபாத்திரத்தில் வன்னியர் ஆக சித்தரிக்கப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் ஆக நடித்தவர் ஒரு ஜாதி வெறியர் போல சித்தரித்து வன்னியர்களின் அடையாளமாக அக்கினி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி காவல் உதவி ஆய்வாளரை வன்னிய சமுதாயத்தை சார்ந்தவர் என்று ஒட்டுமொத்த வன்னிய சமுதாய மக்கள் ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போல் காட்டி உள்ளனர். சகோதரத்துவமாக உள்ள இருளர் வன்னியர்சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சைய்யடுத்தும் விதமாக வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை அவர் வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காத வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் அவர் நடித்து வெளியாகும் எந்தப்படமும் திரையிடக்கூடாது மீறினால் அதன்பிறகு நடக்கின்ற செயல்களுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்று வன்மையாக கண்டிக்கின்றேன் குறிப்பு : வருகின்ற மார்ச் 10ஆம் தேதி அன்று திரைக்கு வர இருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையரங்கு உரிமையாளர்கள் தமிழ்நாடு முழுவதிலும் வெளியிடக்கூடாது என்று மாவீரன் மஞ்சள் படை சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Previous Post Next Post