சென்னை அடுத்த தாம்பரத்தில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் குறித்து விழிப்புணர்வு

 மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தாம்பரத்தில் நடத்தபட்ட மினி மாரத்தான் போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

சென்னை அடுத்த தாம்பரத்தில், ஸ்போர்ட்ஸ் க்ளப் ஆஃப் தாம்பரம் சார்பில் மினி மாரதான் போட்டி நடத்தபட்டது. கொரனா காலத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் எந்த  விளையாட்டு செயல்பாடுகளும் இன்றி முடங்கியிருந்த நிலையில் அவர்களிடையே மீண்டும் விளையாட்டு போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மூன்று பிரிவுகளின் கீழ் 12 வயது முதல் அனைத்து வயதினரும் பங்கேற்கும் விதமாக மினி மாரதான் போட்டி நடத்தபட்டது. இதில் கன்னியாகுமரி விருதாச்சலம் விழுப்புரம் சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டு போட்டியிட்ட நிலையில் , வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் கோப்பைகள் மற்றும் பரிசு தொகைகள் வழங்கபட்டது.



Attachments area
Previous Post Next Post