சென்னை ஐஐடி வளாகத்தில் தலித் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - ஐஐடி மெட்ராஸின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கைது


வழக்குப் பதிவு செய்து ஒரு வருடம் கழித்து, இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தில் கிங்ஷூக் தேவ் சர்மா என்பவரை சென்னை போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபரை சென்னைக்கு அழைத்து வருவதற்கான வாரண்ட் பெறுவதற்காக மேற்கு வங்கத்தில் உள்ள டயமண்ட் ஹார்பர் காவல் நிலையத்தில் சிறை வைப்பு.

2018ஆம் ஆண்டு கல்வி சுற்றுலாவிற்கு செல்லும்போது மாணவியை தனி அறையில் அடைத்து வைத்து உடலில் துணி இல்லாமல் புகைப்படம் எடுத்து அதை வைத்து மிரட்டியுள்ளனர். கிங்ஷீக்தேவ் ஷர்மா அந்த மாணவியை கல்வி வளாகத்திலும், ஆய்வு கூட்டத்திலும் 2 முறை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாணவி கல்வி வளாகத்தில் உள்ள உள்புகார் குழுவிற்கு 2020, ஜூலை 17 அன்று புகார் மனுவை அனுப்பியுள்ளார்.

Previous Post Next Post