இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.!

மூப்பன்பட்டியில் ஏழை மக்களுக்கு அரசின் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மூப்பன்பட்டி ஊராட்சியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள வீட்டுமனை இல்லாத மக்கள் அனைவருக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி மூப்பன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் லிங்கேஸ்வரி தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். 

பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோரிக்கை மனுவை வட்டாட்சியர் அமுதாவிடம் அளித்தனர். இதில் பாஜக வடக்கு ஒன்றியச் செயலர் கருணாநிதி, இலுப்பையூரணி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உத்தண்டுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post