வேளாண் மாணவர்கள் சமூக வரை படம் மூலம் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு.!


கோவையில்‌ உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்‌தில்‌ இறுதியாண்டு படிக்கும்‌ மாணவர்களில்‌ 11 பேர்‌ அடங்கிய குழுவினர்‌ கிராம தங்கல் திட்டத்தின்‌ கீழ்‌ தற்‌போது  வடக்கு பொள்ளாச்சி வட்டாரத்தில் ராம பட்டிணம் ஊராட்சியில் ஜலத்தூரில் தங்கி உள்ளனர்‌. 

இவர்கள்‌ மொத்தம்‌ 75 நாட்கள்‌ தங்கி வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில்‌ ஊரக வேளாண்‌ பணி அனுபவ திட்டத்தில்‌ கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு நடத்தி வருகின்றனர்‌.


இந்தநிலையில்‌, புரவி பாளையம் ஊராட்சியில் ஜமீன் களத்தூர் கிராமத்தில்‌ சமூக வரைபடம்‌ ஆகியவற்றை மாணவர்கள்‌ வரைந்தும்‌, பொது மக்களை வரையச்செய்தும்‌ எங்கெங்கு என்ன, என்ன முக்கிய அலுவலகங்கள்‌ உள்ளன, அங்கு கிடைக்கும்‌ பொருட்கள்‌ பற்றியும்‌ மாணவர்கள்‌ விரிவாக பொதுமக்களுக்கு விளக்கினர்‌. இதற்கு ஜமீன் களத்தூர் கிராம மக்கள்‌ வரவேற்று ஒத்துழைப்பு கொடுத்தனர்‌. 

தொடர்ந்து மாணவர்கள்‌ தென்னை டானிக்‌, தென்னையில்‌ அதிக மகசூல்‌ பெற இடவேண்‌டிய உரங்கள்‌, கால அளவு உள்ளிட்டவைகள்‌ குறித்து விவசாயிகளுக்கு விளக்குவதுடன்‌ எடுத்து கூறினர்.

Previous Post Next Post