நெல்லையில் ரவுடி நீராவி முருகன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.!


நெல்லையில் என்கவுண்டர் தப்பி ஓட முயன்ற ரவுடியை சுற்றிவளைத்த திண்டுக்கல் தனிப்படை காவல்துறையினர் என்கவுண்டர் செய்துள்ளனர்.

நெல்லை களக்காட்டில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய ரவுடி நீராவி முருகன் காவல்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த நீராவி முருகன் இவர் கொலை கொள்ளை உள்ளிட்ட  மீது முப்பத்தி ஆறு வழக்குகள் உள்ளது இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ஒரு மருத்துவர் வீட்டில் 240 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 


முருகனை திண்டுக்கல் காவல்துறையினர் தேடி வந்த நிலையில்  நாங்குநேரி அருகே பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை அவரை தென்மாவட்டங்களில் குற்றச்செயல்களை தடுக்க அமைக்கப்பட்ட சிறப்பு தனிப்படையினர் 

நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் கடம்போடுவாழ்வு அருகே  கைது செய்ய சென்ற போது உதவி ஆய்வாளர் இசக்கித்துரையை  அரிவாளால்  தாக்கியதைத் தொடர்ந்து  நீராவி முருகனை காவல்துறையினர் என்கவுண்டர் முறையில் சுட்டு கொண்டனர்.

Previous Post Next Post