கோவில்பட்டி தினசரி சந்தையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - வியாபாரிகள் மனு.!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  தினசரி சந்தையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நகராட்சி ஆணையர் ராஜாராமிடம் வியாபாரிகள் மனு அளித்தனர். கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன், செயலாளர் நீதிராஜன், 

பொதுக்குழு உறுப்பினர் குட்டி, பொருளாளர் அய்யாத்துரை, உதவி தலைவர் ஜெகன்னாத், உதவி செயலாளர் அழகுராஜா, சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் ராஜாராமை சந்தித்து மனு அளித்தனர். 

மனுவில் கூறியிருப்பதாவது: கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் கடந்த சில மாதங்களாக நகராட்சி நிர்வாகத்தால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பொதுமக்கள், வாகனங்கள் வந்து செல்ல இடையூறு இல்லாமல் இருந்தது. 

ஆனால் கடந்த சில நாட்களாக சிலர் ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறு செய்கிறார்கள். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post