சேலம் மாவட்டம் சந்தைப்பேட்டை ஸ்ரீ சதாசிவ மஞ்சுநாதேஸ்வரர் கோவிலில் தேய்பிறை பிரதோஷம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்

 சேலம் மாவட்டம் சந்தைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ சதாசிவ மஞ்சுநாதேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கும் சதாசிவ  மஞ்சுநாதேஸ்வரருக்கு  பால், தயிர்,மஞ்சள்,திரு மஞ்சள், சந்தனம்,இளநீர்,தேன் , பஞ்சாமிர்தம் , கரும்புச்சாறு போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நறுமண மலர் மாலைகள் சூட்டி பட்டாடை உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நெய்வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு நந்தி பகவானுக்கும் மஞ்சு நாதேஸ்வரர் க்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்பட்டு கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் கலந்துகொண்ட பக்தர்களுக்கு விபூதி குங்கும பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.



Attachments area
Previous Post Next Post