பெரிச்சிபாளையத்தில் புதுப்பிக்கப்பட்ட  முனியப்பன் கோவில்தொடக்க விழா

  திருப்பூர் பெரிச்சிபாளையம் நால் ரோட்டில் முனியப்பன் கோவில் உள்ளது.
இந்த கோவில் நூற்றாண்டுகளை கடந்த இந்த  கோவிலில் காவல் தெய்வமாக அரிவாள் மற்றும் வேல் ஆகியவற்றுடன் முனியப்பசாமி அருள்பாலித்து வருகிறார். அப்பகுதி மக்கள் இங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பெரிச்சிபாளையம் முனியப்பன் கோவில் மேற்கூரை அமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. 
புதுப்பிக்கப்பட்ட முனியப்பன் கோவில் தொடக்க விழா யாக பூஜைகள் நடைபெற்றது. காலை 5 மணியளவில் வீரமாத்தியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு முனியப்பசாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம், அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
Previous Post Next Post