அவிநாசியில் மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டி

தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் மாவட்ட கால்பந்து லீக் போட்டிகள் அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்றன.
மொத்தமாக மாவட்டம் முழுதுமிருந்து 22 அணிகள் பங்கேற்றுள்ளன. தலா 11 அணிகள் வீதம் ஏ, பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. நேற்று காலை நடைபெற்ற முதல் போட்டியில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள அவிநாசி ஏஎஸ்சி மற்றும் பல்லடம் செந்தில் எப்.சி. அணிகள் மோதின. இதில் ஏஎஸ்சி அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் சேயூர் மற்றும் திருப்பூர் வாரியர்ஸ் அணிகள் மோதின இதில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்ததால் போட்டி டிரா ஆனது. 3-வதாக ஏ பிரிவில் உள்ள திருப்பூர் ஜூனியர்ஸ் மற்றும் விக்டரி அணிகள் மோதின. இதில் திருப்பூர் ஜூனியர்ஸ் அணி 6-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. லீக் இறுதியில் அதிக புள்ளிகள் பெறும் 4 நான்கு அணிகள் சூப்பர் லீக் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post