கனடா -சாலை விபத்தில் ஐந்து இந்திய மாணவர்கள் பலி.!


டொரன்டோ: கனடாவில் ஒன்டோரியொ நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் சிக்கி ஐந்து இந்திய மாணவர்கள் பலியாகினர். இதனை கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிஸாரியா உறுதிப்படுத்தியுள்ளார். 

மாணவர்கள் சென்ற வேன், முன்னே சென்ற ட்ராக்டர் ட்ரெய்லரில் மோதி விபத்து நடந்துள்ளதாகத் தெரிகிறது.

ஹர்ப்ரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோஹித் சவுகான் மற்றும் பவன் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக குயின்ட் வெஸ்டில் உள்ள ஒன்டாரியோ மாகாண காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


பலியானவர்கள் 21 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் கிரேட்டர் டொரோன்டோ மற்றும் மாண்ட்ரீல் பகுதிகளில் உள்ள மாணவர்கள் என போலீஸார் தெரிவித்தனர்.

மாணவர்களின் மறைவுக்கு, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்தியத் தூதரக மாணவர்களின் குடும்பத்திற்கு அனைத்துத் தேவையான உதவிகளையும் செய்யும் எனப் பதிவிட்டுள்ளார்.

Previous Post Next Post