தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணனுக்கு அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் சார்பில் பாராட்டு.!

 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள Dr.L.பாலாஜி சரவணனை அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் #AICCI சார்பாக தலைவர் திரு GP.ஜோ பிரகாஷ் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து பணி சிறக்க வாழ்த்து தெரித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக சிறப்பாக பணியாற்றிய ஜெயக்குமார், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சிபிசிஐடி சிறப்பு பிரிவு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து சென்னை காவல்துறை இணை ஆணையராக பொறுப்பு வகித்து வந்த பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் 02.03.2022 அன்று காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற Dr.L.பாலாஜி சரவணனை கடந்த (15.03.2022) அன்று அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் #AICCI சார்பாக தலைவர் GP.ஜோ பிரகாஷ் தலைமையில், பொதுச்செயலாளர் S சங்கர் மாரிமுத்து, துணைத் தலைவர்கள் TR.தமிழரசு, மற்றும் DR. பாலமுருகன்  ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தியும், மலர்க்கொத்து வழங்கியும் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post