பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா மறுபூஜை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில்,  அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் குண்டம் பெருந்திருவிழா கடந்த 7ஆம் தேதி பூச்சாட்டு தலுடன் துவங்கி கடந்த 22ஆம் தேதி குண்டம் நடைபெற்றது.


 இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளா கர்நாடகா மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமியை தரிசனம் செய்த னர் குண்டம் திருவிழாவில் நிறைவாக மறு பூஜை விழா நடைபெற்றது. தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் காரணமாக பொதுபோக்கு வரத்து போதிய அளவு இல்லாத சூழ்நிலையிலும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை யாகவும், சொந்த வாகனத்திலும் பண்ணாரி கோவிலில் குவிந்து, மறுபூஜை விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Previous Post Next Post