திம்பம் மலைப்பாதயைில் பழுதாகி நின்ற கண்டெய்னர் லாரி, தினசரி தொடரும் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் கடும் அவதி

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி கொண்டை ஊசி வளைவில் பழுதாகி நின்றதால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 2 மணி நேரத்திற்க்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த மலைப்பாதையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த மலைப்பாதையில் அவ்வப்போது வாகனங்கள் கவிழ்வதும்,விபத்து ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும்  தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில்  கரூரில் இருந்து ராஜஸ்தான் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது 15 வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென பழுதாகி  நின்றது.இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டு புறமும் அணிவகுத்து நின்றன.இதனால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பயணிகள், பொதுமக்கள் என அனைவரும் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தினசரி தொடரும் இந்த போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தொடர்ச்சியாக ஏற்படும் இந்த போக்குவரத்து பாதிப்பை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Previous Post Next Post