நர்ஸ் கும்பல் பலாத்காரம் - பெங்களூரில் நீச்சல் பயிற்சியாளர்கள் நால்வர் கைது.!

பெங்களூரில் நர்ஸ் ஒருவரை நான்கு நீச்சல் பயிற்சியாளர்கள் கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ரஜத் சுரேஷ், யோகேஷ் குமார் தலால், ஷிவ்ரானா டெக்சந்திரா மற்றும் தேவ் சரோஹா ஆகிய நான்கு நீச்சல் பயிற்சியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

டேட்டிங் செயலியில் மூலம் ரஜத் அந்த செவிலியருடன் நட்பு கொண்டிருந்த நிலையில் அவரை தான் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு குற்றவாளிகள் 4 பேரும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக செவிலியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து நால்வரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரனை நடை பெற்று வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post