தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வாலிபர் வெட்டி கொலை- மூன்று பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.!*


தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி செந்திலாம் பண்ணையை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (45). இவர் தற்போது புதுக்கோட்டை அய்யனார் காலனியில் வசித்து வந்தார். இவர் மீது கஞ்சா விற்பனை உள்பட 11 வழக்குகள் உள்ளன. 

இந்நிலையில் இன்று மாலை தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை அருகே நின்று கொண்டு இருந்த போது அங்கு பைக்கில் வந்த 3 பேர் திடீரென முத்துப்பாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது 

தொடர்ந்து இந்த கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இக்கொலைச் சம்பந்தமாக  வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post Next Post