தூத்துக்குடியில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் பரிசோதனை செய்யப்படுவதை ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


தேசிய ஊட்டச்சத்து இயக்கம்(போஷன் அபியான்) கீழ் 1 முதல் 6 வயது வரையிலான அனைத்து ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிதல் முகாம் இன்று (மார்ச் 21) முதல் 27 வரை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், 


தூத்துக்குடி ஊரக மடத்தூர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் ஆகியவற்றை பரிசோதனை செய்யப்படுவதை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.

Previous Post Next Post