தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் புதிதாக பயிற்சி காவலர்களுக்கான அறிமுக வகுப்பு - மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் துவக்கி வைத்தார்.!


தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் 2020 ஆம் ஆண்டில் நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 448 ஆயுதப்படை பெண் காவலர்கள் நேற்று தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சிப் பள்ளியில் அறிக்கை செய்தனர்.

புதிதாக அறிக்கை செய்த பயிற்சி பெண் காவலர்களுக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன்  அறிமுக வகுப்பை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்ச்சியில் காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அனிதா, முதன்மை சட்ட போதகர் காவல் ஆய்வாளர் ஜானிட்டர் பாபுனி, முதன்மை கவாத்து போதகர் காவல் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

Previous Post Next Post