மாநில சிறுபான்மை ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் - மேயர் ஜெகன் பெரியசாமி துவங்கி வைத்தார்.!


தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி 

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி கல்லூரியின் வைத்து நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். 


மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பேச்சுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.


தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டனர் இந்தப் பேச்சுப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெறக்கூடிய மாணவ மாணவியர் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற உள்ளனர்  


நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை ஆணையத்தின் பேச்சுப்போட்டி ஒருங்கிணைப்பாளர் நெடுஞ்செழியன், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்வியல் கல்லூரியின் செயலாளர் ஏ.பி.சி.வி.சண்முகம் கல்லூரி முதல்வர் வீரபாகு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post