கோபியில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

 அந்தியூர் பகுதியில் கொலை செய்யப்பட்ட கோபி வெள்ளாளபாளையத்தைச் சார்ந்த ஓட்டுநர் சதீஷ்-யின் கொலையில் மர்மம் விலகிட,உண்மைக் குற்றவாளிகள் தண்டனை பெற்றிட வலியுறுத்தியும்,வழக்கினை CBIக்கு மாற்றக்கோரியும் ஈரோடு மேற்கு மாவட்ட இந்துமுன்னணியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது கோபி பேருந்துநிலையத்தில் இந்துமுன்னணியின் மாநில செயலாளர் V.S.செந்தில்குமார் அவர்கள் தலைமையில்,வெள்ளாளபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியபாமா,யூனியன் கவுன்சிலர் திலகவதி மற்றும் வெள்ளாளபாளையம் அனைத்து வார்டு உறுப்பினர்கள் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது .

 மாவட்ட துணைத்தலைவர்கள் குறிஞ்சி சேகர்,செல்வராஜ்,குமார்,மாரிமுத்து,மாவட்ட செயலாளர்கள் பாலமுருகன்,சீனிவாசன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன்,சிவக்குமார்,அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன்,திங்களூர் ஒன்றிய தலைவர் தமிழ்செல்வன்,கோபி நகர தலைவர் மணிகண்டபிரபு,லக்கம்பட்டி தலைவர் கார்த்தி,பொதுசெயலாளர் தமிழ்வாணன்,செயலாளர் கார்த்தி,நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கொலைசெய்யப்பட்ட சதீஷ் குடும்பத்தார்,வெள்ளாளபாளையம் ஊர் பொதுமக்கள் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணசாமி நன்றியுரை ஆற்றினார்..

Attachments area
Previous Post Next Post