கோவில்பட்டியில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் - நகராட்சி தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் ஊரணி தெரு நகர சுகாதார மையத்தில்  நடைபெற்றது. முகாமினை நகராட்சி தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு சுகர், யூரியா கிரியாட்டின்  மற்றும் ஈசிஜி போன்ற பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. இதில் ஏராளமானோர் பயன்பெற்றனர்.

நிகழ்வில் கமிஷனர் ராஜாராம், நகர்மன்ற உறுப்பினர் தவமணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அமலிபிரகாஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன் மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் நாராயணன், நகர்நல அலுவலர் டாக்டர் விஜய், மருத்துவர் தாய்லட்சுமி, சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், சரவணன் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post