பள்ளிகளில் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு..!!

தமிழ்நாட்டில் பள்ளிகளில் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

பள்ளிகளில் 6 - 9ம் வகுப்பு வரை மட்டுமே விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பொதுத் தேர்வு காரணமாக 10, 11, 12 ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி இல்லை. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post