உத்தரபிரதேச கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய தடை.!


உத்தரபிரதேச மாநிலம் அலிகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வர்ஷினி கல்லூரி நிர்வாகம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள உத்தரவில், "முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரதடை விதிக்கப்பட்டுள்ளது. சீருடை அல்லாத மற்ற உடைகளை அணிந்து வரக் கூடாது" என கூறப்பட்டுள்ளது. இதனால் நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டுக்குத் திரும்பினர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாக அதிகாரி பீனா உபாத்யாயா கூறும்போது, “கல்லூரிக்குள் மாணவிகளுக்கு சீருடை விதிமுறை உள்ளது. அதை அனைவரும்பின்பற்ற வேண்டும் என்று உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். கல்லூரி விதிமுறைகளை அனைத்து மாணவ, மாணவிகளும் பின்பற்றவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.

ஹிஜாப் அணிவதற்கான உரிமையை கோரி தென் மாநிலத்திலுள்ள தங்கள் சகாக்களுக்கு ஆதரவை வழங்குவதற்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் (AMU) வளாகத்தில் எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த உத்தரவுகள் வந்துள்ளன.

இந்தக் கல்லூரியானது ஆக்ராவிலுள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகத்துடன் இணைப்பில் உள்ளது. 1947-ல் அமைக்கப்பட்ட இந்தக் கல்லூரியில் 7 ஆயிரம் பேர் வரை படித்து வருகின்றனர். அதில் 60 சதவீதத்துக்கும் மேல் பெண்கள் ஆவர். மேலும் அதில் 250 முஸ்லிம் மாணவிகள் பயின்று வருகின்றனர்.

Previous Post Next Post