நரிக்குறவர் பயனாளிகளுக்கு குடும்ப அட்டை - மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், வழங்கினார்.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், மாவட்ட வழங்கல் துறையின் மூலம் 10 நரிக்குறவர் பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினார்.

நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான் , உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், ஆகியோர் உடனிருந்தனர்.

Previous Post Next Post