சத்தியமங்கலத்தில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம். அரசு அலுவலங்கள் வெறிச்சோடின.


மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல்,  தொழிற்சங்க சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மற்றும் நாளை நாடு தழுவிய அளவில் அனைத்து 


தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் பெரிய தபால் நிலையம் ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால், அலுவலகம் பூட்டப்பட்டும், 

எல்.ஐ.சி மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் அலுவலர்கள் வருகை குறைவு காரணமாக அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக செய்தியாளர் கே.நாராயணசுவாமி சத்தியமங்கலம்

Previous Post Next Post