வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் நன்றி.!


உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ள நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மற்றும் தமிழ்நாடு அரசின் குழுவைச் சேர்ந்த சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இது குறித்து அவர் கூறுகையில்,

"நெருக்கடி மிகுந்த சூழலுக்கிடையே நம் மாணவர்கள் அனைவரையும் விரைவாக மீட்க உதவிய வெளியுறவுத்துறை அமைச்சர் @DrSJaishankar, இரவுபகல் பாராமல் உழைத்த தமிழ்நாடு அரசின் குழுவைச் சேர்ந்த சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

உக்ரைனில் இருந்த தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தாயகம் திரும்பிய கடைசி அணி மாணவர்களை இன்று வரவேற்றேன். அவர்கள் நம் நாட்டிலேயே தங்கள் கல்வியைத் தொடர உதவவேண்டுமென ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்; உரிய ஒத்துழைப்பைத் தமிழ்நாடு அரசு வழங்கும்!'' என தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post