கர்ப்பிணி மனைவியை உதைத்து கொடுமை செய்த கணவனுக்கு குண்டாசில் ஜெயில்...போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு அதிரடி

திருப்பூர் ,  போயம்பாளையம், சக்திநகர் இரண்டாவது வீதியில் வசித்துவரும்  குணசேகரன் (வயது 42) இவரது மனைவி  சுப்புலட்சுமி (வயது 36)  உதயசூரியன் என்பவரிடம் அவரது கணவர்   கடந்த 31.01.2022 அன்று தகராறு செய்து எட்டு மாத கர்ப்பிணி என்றும் பார்க்காமல் காலால் எட்டி உதைத்து கொடுமை செய்தது தொடர்பாக திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் சுப்புலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்கண்ட வழக்கில் தொடர்புடைய குணசேகரன்   அனுப்பர்பாளையம் போலீசாரால் 15.03.2022 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேற்படி குணசேகரன் குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொது ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், தொடர்ந்து அடிதடி, மிரட்டல் போன்ற சமூகத்தை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் எதிரி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு  ஆணையிட்டுள்ளார்

எதிரி குணசேகரன் மீது அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, வடக்கு காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட மொத்தம் 4 வழக்குகள் உள்ளது.

கோயமுத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள  குணசேகரன் என்பவரை ஒர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நேற்று ஆணை வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரத்தில் பொது அமைதிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 20 நபர்கள் இந்த ஆண்டில் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post